articles

img

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா! முதலில் கம்யூனிஸ்ட், முழுவதும் கம்யூனிஸ்ட்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முக்கியமான மற்றும் இளைஞர் தலைவ ராக விளங்கிய புத்ததேவ், தோழர் ஜோதிபாசு அமைச்சரவையில் 33 வயதில் இணைந்தார். பழமைவாதம் வேரூன்றிய குடும்பத்தில் பிறந்தவர். 20 வயதில் காச நோயால் மரணம் அடைந்த வங்கத்தின் பிரபல புரட்சி கவிஞர் சுகன்  பட்டாச்சார்யா இவருக்கு மாமா. ஆனால் அவரது  முற்போக்கு அரசியலை புத்ததேவின் குடும்பம் ஏற்கவில்லை. இவருடைய அரசியல் பிடிப்புக்கு வேறு பல காரணங்களும் இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு அரசியல் ரீதி யாகவும் கலாச்சார ரீதியாகவும் துடிப்பு நிறைந்த அவருடைய இளமைப் பருவம் மார்க்சிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்திற்கு ஏற்ப உதயமானதில் வியப்பு ஒன்றுமில்லை.

வலது கரமாய் திகழ்வேன்

இந்தியாவில் சிறந்து விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலது கரமாகத் திகழ்வேன் என்று இங்கு பயணம் மேற்கொண்ட பிரிட்டன் கம்யூனிஸ்ட் தலைவர் ஹாரி பாலிட்கூறுவது உண்டு.

அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கண்டிப்பு, ஊழலற்ற  தன்மை மற்றும் அறிவுசார் கலாச்சார  நடைமுறை கள் உடையவர்களாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர்கள் விளங்கினர். வங்காளத்தை பொருத்தவரை இது இன்னும் தீவிரமாகவே இருந்தது. விடுதலை அடைந்த பொழுது இந்தியா விற்கு குறிப்பாக வங்காளத்திற்கு ஒரு முக்கிய கடமை காத்துக்கிடந்தது. நிலச் சீர்திருத்தங்களை நிறுவுவதன் மூலம் ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்வது என்பதுதான் அது. இதை கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டுமே சாதிக்க முடியும். அதற்கான ஒரு தெளிவான கோட்பாட்டை  வழங்கியவர் லெனின்.

இந்த தெளிவும் அமைப்பின் வலிமையும் தான் மேற்கு வங்கத்தில் புத்ததேவ் மற்றும் அவர்  தலைமுறையை சார்ந்த இளைஞர்கள் பலரை யும் கம்யூனிஸ்டுகள் பக்கம் ஈர்த்தது. 1950 களில் துவங்கி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக கம்யூனிஸ்டுகள் வளர்ந்தனர். எனவே அரசின் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகினர்.

ஐவரில் ஒருவர்

1977இல் அவசரநிலைக் காலத்திற்கு பிறகு வங்கத்தில் இடதுமுன்னணி ஆட்சியைப் பிடித்தது. ஜோதிபாசுவின் அமைச்சரவையில் 33 வயதுடைய புத்ததேவ் இணைந்தார். பழைய தலைமுறையினரிடமிருந்து பொறுப்புகளை நிறைவேற்ற இப்போதைய மாநில செயலாளராக இருந்த பிரமோத் தாஸ் குப்தா தேர்ந்தெடுத்த ஐந்து  இளைஞர்களில் புத்ததேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

புத்ததேவ் தனது முதிர்ச்சி நிறைந்த வாழ்க்கை யில் பாதிக்கு மேலாக அமைச்சரவையில் பணி யாற்றினார். இடது முன்னணி அரசாங்கத்தில் முதலில் கலாச்சார அமைச்சர், பிறகு உள்துறை அமைச்சர், இறுதியில் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு அப்பால்  இரண்டு முறை ஒரு நாடகத்தை  கல்கத்தா வில் அரங்கேற்றினார். அவருடைய அரசியல் கடமைகள் கலைத்துறையில் ஈடுபட முடியாமல் அவரை தடுத்தன. எப்படி இருந்தாலும் அவரது வாழ்க்கை அதன் உயர்விலும் தாழ்விலும் இடது முன்னணி ஆட்சியின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.

‘ஆப்பரேஷன் பர்கா’

புத்ததேவ் முக்கியப் பங்கு வகித்த இடது முன்னணி அரசாங்கம் மேற்கு வங்கத்தின் ஜன நாயகப் புரட்சியின் முடிக்கப்படாத பணியை நிறைவேற்றியதில் ஒரு முக்கிய பங்கினை ஆற்ற வேண்டியிருந்தது. அதுவரை சட்டப்பூர்வ மாக அங்கீகாரம் பெறாமல் இருந்த குத்தகை தாரர்களை பதிவு செய்து சாகுபடி மேற்கொள் வதற்காக வங்கிகளிடமிருந்து கடன் பெற உத வியது. உழுபவர்களுக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்பு மூலம் நிலமற்றவர்களுக்கு நில விநியோகம், துடிப்பான அரசியலை உருவாக்கிய பஞ்சாயத்து முறைகளின் மறுமலர்ச்சி ஆகியவை இடதுமுன்னணி ஆட்சியின் சில சாதனைகள் ஆகும். நில உடமையாளர்களின் அதிகாரத்தை குறைத்தது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தை மீட்டெடுத்து மேற்குவங்க பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியது. உண்மை யில் 1990களின் காலம் இந்தியாவின் விவசாய வளர்ச்சி அடிப்படையில் மேற்குவங்கம்  முத லிடத்தை வகித்த பொற்காலமாகும்.

இந்த கட்டத்திற்கு பிறகு இடது முன்னணி அரச ருக்கு தொழில்மயமாக்கலின் தேவை முன்னுக்கு வந்தது. மாநிலத்தில் தொழிற்சாலைகளை அமைக்க முதலாளிகளை கவர்ந்திருக்கும் வழக்க மான வழியை பின்பற்றலாமா அல்லது விவசாய வளர்ச்சி வேகத்தை தக்க வைத்து பெருமளவில் தொழில்களை துவங்க விவசாயிகளுக்கு சொந்த மான கூட்டுறவு முறைகளை உருவாக்கலாமா? பொதுத் துறையில் தொழில் பிரிவுகளை அமைக்க லாமா? - என தீவிரமாக விவாதித்த காலம். நிதி பற்றாக்குறைகள் மாநில அரசே சுயேட்சையாக தொழில்கள் துவங்க அனுமதிக்கவில்லை. எனவே அவர் முதல் வழியை சீனாவின் முன்னு தாரணத்தின் அடிப்படையில் பின்பற்ற முனைந் தார்.  மேற்குவங்கத்தில் ஒரு சிறிய கார் உற்பத்தி  ஆலையை நிறுவுவதில் டாடா நிறுவனம் காட்டிய ஆர்வம். ஆனாலும் இந்த திட்டத்திற்காக விவசாயி களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தும் இடதுமுன்னணி அரசாங்கத்தின் முயற்சியானது விவசாயிகளை அந்நியப்படுத்த துவங்கியது. இறுதியில் அது தோல்விக்கும் வழி வகுத்தது.புத்ததேவும் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

இடது முன்னணி  பங்களிப்புகள் எந்த விதத்திலும் குறைவானது அல்ல

மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்படு வதற்கு முன்னோடியாக இருந்ததைப் போலவே, மாநிலங்கள் பிரிந்து செல்லும் கோரிக்கைக்கு பதிலாக சுயாட்சி கவுன்சில் உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு தன் பங்கினை வகித்தது. அதற்கு ஏற்ப டார்ஜிலிங் கோர்க்கா மலை கவுன்சில் உரு வானதில் உள்துறை அமைச்சராக விளங்கிய புத்த தேவின் பங்கு அலாதியானது. மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடிமைக் குழுக்களில் இருந்து மீண்டும் இப்பொழுது மாநில பிரிவுக்கான கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வருகின்றன. சுயாட்சிக் கவுன்சிலில் கட்ட மைப்பானது வளங்கள் மற்றும் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. தனி மாநிலம் என்னும் கோரிக்கையையும் இதன் மூலம் தவிர்க்க முடியும். புத்ததேவின் முன் முய ற்சிகளை பின்பற்றுவதே அவருடைய பணிகளை நினைவு கூர்வதற்கான சிறந்த வழியாகும்.

தோழர் புத்ததேவின் வாழ்க்கை  எளிமை சிக்கனம் இரண்டிற்கும் தலைசிறந்த முன்னு தாரணம். இரண்டு அறைகள் கொண்ட, எப்பொ ழுதும் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் இருந்த மிக மோசமான குடியிருப்பு தான் அவருடைய இல்லம். எனவே ஒரு கம்யூனிஸ்ட் என்பதற்கு பொருத்தமாக தன் வாழ்க்கையை வகுத்துக் கொண்டவர். நீண்ட காலம் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

புத்ததேவுடன் ஒருவர் உடன்படலாம் அல்லது மாறுபடலாம்; ஆனால் அவர் மேற்குவங்க அரசி யல் நிலப்பரப்பில் உண்மையான உன்னதமான ஒரு சிறந்த மனிதராக திகழ்ந்தார் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆகஸ்ட் 12,2024.)
- தமிழில் கடலூர் சுகுமாரன்